48 வார்த்தைகளில்
போட்டி#1
16.09.16
கருத்த பூங்குழல்
விரித்த தோகையென் றுதித்த
கதிரவன் தன்ஒளிக் கிரணமதை
முகில் கொண்டு துடைத்துத்
தன்னுள்ளம் மென்னொளியாய்ப்
பரிசளித்தே மகிழ்வுற்றுத் தண்ணென்றாக
பிரம்மன் தூரிகை வரைந்த
ஓவியம் உயிர்த்தெழுந்து தரையினிலே
ஒய்யார நடை போட்டதென்றே
பிரமையில் மலர்கள் ஆடையில்
பின்னிக் கொண்டு பிறப்பின்
பயனைப் பெற்றோமென இறுமாந்திருக்க
வேலிகள் உடைத்துப் பண்பாடுடைத்து
விடுதலையுற்றுக் கலைபல பெற்று
வல்லினமுற்ற மெல்லியலாளும்
தன்னிறைவதில் பெருமை கண்டு
வானமவள் எல்லையென மோனத்திருந்தாள்....
#போட்டி 2
உலகு சுருங்க வைத்ததில்
உரிய பங்கு எனக்குண்டு
கன்னங்கரிய என்னுடல்
காட்சிப் பொருளாய் ஆனதின்று
எந்தன் குரலைக் கேட்டதும்
இன்றும் மகிழும் மனமுண்டு
பல் விழுந்த மனிதர்கூட
பிள்ளையெனக் களிப்ப துண்டு
மோகன்தாஸ் காந்தியாய் மாறிட்ட
கணமதுவும் மணியாச்சி ஏட்டிலிடம்
பெற்று நிலைத்ததுவும் நாடு பங்குற்ற
நேரம் நடந்திட்ட கொடுமையதும்
சாட்சியாய் எனைக்கொண்டு நிகழ்ந்ததுவே
வாரிசுகள் பரிணாம வளர்ச்சிகண்டு
வேகங்கூட்டிப் பறந்திட்டாலும்
என்பெருமை மறக்காமல்
சிறப்பித்தே ஓடவிட்டார்....
கவியாக்கம் - ரத்னா வெங்கட்
No comments:
Post a Comment