Monday 19 September 2016

#படக்கவிதை 48 சொற்களுக்குள் 09.09.16 #27

#படக்கவிதை 48 சொற்களுக்குள்
09.09.16
போட்டி# 1

கருமமே கண்ணாக கண்ணம்மா
கடவுளே வந்தாலும் கண்பாராள்
கதிரவனும் கண் மயங்கும்
காலையிலே கண்விழிச்சு
ஊதுகுழல் கையில் கொண்டால்
ஊரு சனம் உவப்பாகும்
வரிசை போட்டு வயிராறும் ....

இடியாப்பமும் இட்டலியும்
இனிக்கும் அவள் கைவண்ணத்தில் 
கருணை பூத்த முகத்தைக் கண்டு
நாணும் வெள்ளைப் பணியாரமும்
நாட்டில் எங்கே தேடினாலும் 
கிடைக்காதவள் கைப் பக்குவம்
காசைக் கொட்டிக் குடுத்திட்டாலும்
காணாதவள் தாய்மை உள்ளம்
அன்னையில்லா பிள்ளைக்கெல்லாம்
அம்மாவான மனப்பக்குவம்....

போட்டி# 2

ஒத்தச் சக்கரந்தான் 
சூரியனைப் போலத்தான்
ஓயாமல் ஊரைச்சுத்தி இப்போ
ஓய்வெடுத்து நின்னாச்சு
ஓட்டிய கன்றிரெண்டு
ஓய்வெடுத்துப் பசியாறக்
கடமை கொண்ட வீரனாய்க்
காவலது காக்கத்தான்
கேடயமாய் மாறியிங்கே
பெருமிதமாய் நின்னாச்சு ....

நிக்கையிலே அதனுள்ளே
நினைப்பொன்று ஓடியது
காலமும் என் போலத்தான் 
காற்றெனவே நகர்ந்து செல்லும் 
வாழ்வுமொரு சக்கரந்தான்
வட்டமது உருண்டு வாழ்வில்
ஏற்றமது தந்துவிடும் 
ஊக்கமென்ற குச்சி கொண்டு
ஓயாது உருட்டிட்டால் 
தோழர்களே ஓடுங்கள் 
வெற்றியது காணுங்கள் .....

கவியாக்கம் - ரத்னா வெங்கட்

No comments:

Post a Comment