# கதை கவிதை
26.08.16
முதல் முறை வான்முகில் தனை
முத்தமிட்ட வெள்ளிப் பறவையில் பயணம்
படிப்படியாய் வாழ்க்கைப் படியேற
பதவி தந்த சொகுசுப் பிரயாணம்......
இது சொர்க்கத்தின் சிறுபதிப்போ
இதனிலும் இரு வகுப்போ
இருக்கை தேடியமர உதவும்
தேவதைகள் அணி வகுப்போ.....
அமர்ந்தவுடன் நட்புடனே புன்னகைக்க
அருகமர்ந்த மாது முகம் கோணலாக
தேளெதுவும் கொட்டியதோ.... முகம்
தெளிவாய்க் காட்டியது...மன பின்னம்?
ஒட்ட நிறமென்ன சாயமா? சாபமா?
உயரப்பறந்தால் உயருமோ உள்ளம்? .....
தேவதையை அழைத்தவள் குற்றங்கூற
தேனான புன்னகை மாறாமல் கேட்டுத்
தேவைதனை விமானியிடம் கலந்தாலோசிக்க
மனக்குறைகள் எங்கள் பயணிக்கோ
மாற்றுவது எங்கள் கடமையன்றோ
மாறாத அன்புடன் முதல்வகுப்பு ஈந்தார்....
பேதத்தால் மனித நிறமிழந்த மங்கைக்கல்ல
பாதித்தாலும் புன்னகை மறக்காத
நல்லிதயத்திற்கு -மனித
நேயத்திற்கு நிறமொரு பொருட்டல்ல .....
கவியாக்கம் - ரத்னா வெங்கட்
No comments:
Post a Comment