Saturday 24 September 2016

#தென்றல் தீண்டி # புன்னகைக்காதோ பூக்கள் 22.08.16 #39

#தென்றல் தீண்டி
# புன்னகைக்காதோ பூக்கள்
22.08.16

தென்றல் தீண்டிய இளவேனில்
செக்கர் உதித்த வானில்
வெள்ளித் திருவிழா நாளில் தங்கத்
தேர் உலா வரும் ஊரில்
தோழியர் புடை சூழ......

கரும்பவழ நிறப் பட்டாடை
கனியிதழுடன் போரிட்டுத் தோக்க
மைக்குளம் நீந்திய மீன்கள் பொன்
தாமரை இதுவெனத் துள்ளி
அலை பாயும் பொழில்.....

மேகம் ஒன்று வான் விடுத்து
தோகை நுதல் மோகம் கொள்ள
பாதையெங்கும் பூ விரித்துப்
பத்திரமாய்ப் பாதம் ஏந்தும் 
பித்தான பல இதயங்கள் ......

மலர்விரல் நோகத் தொடுத்த 
மல்லிகையும் மனம் நொந்து
பரிகாரம் செய்ய மனமுவந்து
பின்னல் சிறைப் பட்டதொரு
நாளில் இரு பொழுதுகள் ....

கன்னியழகு சித்தம் மேவ
கவியுரைத்தது சொல்லழகு
கருக் கொண்ட வார்த்தைகள் தனில்
கருத்தாழம் தேடிக் காணாமல் 
பூஞ்சோலையில் புன்னகைக்காதோ பூக்கள்.......

கவியாக்கம் - ரத்னா வெங்கட்

No comments:

Post a Comment