#கும்மிப் பாட்டு
#கிராமியக் கவிதை
18.09.16
கும்மியடி பெண்ணே கும்மியடி நாமும்
உயர்ந்திடக் கைகொட்டிக் கும்மியடி
கண்மணியாம் எங்கள் பெண்கள் இனமது
மகிழ்ந்திடக் கைகொட்டிக் கும்மியடி
கருவினி லுதித்து கல்லறை தப்பி
கண்விழித் தோமே கல்வி கொண்டு
கருத்தாய் வாழக் கற்றிட்டு நாமே
காண்போம் வளமென்று கும்மியடி
அடுக்களை மட்டுமா நம் சொந்தம்
பல அலுவல்கள் கூட நம் பந்தம்
அனைத்தும் புரிவோமே ஏற்புடனே நாம்
அவதானி என்றேதான் கும்மியடி
அச்சம் தவிர்ப்போம் ஆக்கம் பெறுவோம்
ஆதாரமாய் அன்பை நாம் கொள்வோம்
நாணம் கொள்வது நல்லொழுக்கம் இல்லாப்
பண்பைக் கண்டெனக் கும்மியடி
எத்தனை எத்தனை துறைகள் உள்ளது
அத்தனை யிலும்நம் தடம் பதிப்போம்
எங்கும் எதிலும் குறைவில்லை நாமென
இங்கு உரைத்தே பெண்ணே கும்மியடி
கவியாக்கம் -ரத்னா வெங்கட்
No comments:
Post a Comment