#பூமித்தாயி தந்த வரம்
# பூரித்து நிக்குதே மனம்
11.09.16
பூமித்தாயி தந்த வரம்
பூவிழி நிறையும் பசுமை வளம்
மண்ணைப் பொன்னாய்
பொன்னே போல் மணியாய்
மணிமணியான நெல்லாய்
மாற்றும் வித்தை கற்றே நம்
முன்னோர் காட்டிய ரஸவாதம்.....
சேறும் சோறும் இரண்டெழுத்து - ஒரு
காலால் மாறும் நம் தலையெழுத்து
உழைத்திட அஞ்சா மாண்புடைத்தோர் -நாம்
உய்ந்திடத் தேவை அவர் உயர்வுடைத்து...
மதலையின் பசிதீர முலைசொரிந்த
நெகிழ்வன்றோ அன்னையின் மேனி வண்ணம்
நெகிழி புதைத்து அதைக் குலைக்காமல்
மரபு தொலைத்த விதை விதைக்காமல்
அவள் அன்பின் ஈரமதை உறியாமல்
வளமுறக் காத்திடல் நம் நலம்பேணும்....
நெல் பொழியும் பசுங்காடும்
நீர்நிறைந்த கண்மாயும்
உரமிட்டுக் குறையா மண்வளமும்
உழைத்து உரம் பெற்ற தோள்கள்
உயர்ந்திடவும் வகை கண்டிட்டால் ?
கனவதிலேயே
பூரித்து நிக்குதே மனம்!!!!!!....
கனவது நினைவாக வேண்டி நிற்கும்
-ரத்னா வெங்கட்
No comments:
Post a Comment