# உடல் வலிமை
06.09.16.
சுவர் சரியாய் இருந்தாலே
சித்திரம் வரைய இயலும்
அன்னை கூறிய பழமொழி
அனுபவம் கண்ட பொன்மொழி.....
அகம் பிரம்ம ஒளி
அதன் பொருள் தேடும் வழி
உள் மூச்சாயிருக்கும் வளி அதன்
உருவம் செதுக்கு நீயே உளி......
கடவுள் வாழும் கருவறை என்போரும்
காயமிது வெறும் கருவி என்போரும்
ஒருமித்து உரைப்பர் ஒரு கூற்று
ஒழுக்கத்தோடு உடல் நலம் பேணு.....
மருந்தே உணவாகும் நிலை தடுக்க
விருந்தே ஆனாலும் அளந்து உண்க
சோம்பித் திரியாமல் உடற்பயிற்சி -நிதம்
சாத்தியமாக்கி விடக் கூடும் மகிழ்ச்சி...
நாவடக்கி,உளம் கட்ட,உடல் வலிமை
தேடி வரும் காயகல்பம் தேவையில்லை
தேவை
உறுதி கொண்ட நெஞ்சும்
உரம் பாய்ந்த தோளும்
ஒருங்கமைந்த இளநெஞ்சங்கள் என்றும்
குன்றாத பெருஞ்செல்வங்கள்.....
கவியாக்கம் - ரத்னா வெங்கட்
No comments:
Post a Comment