Saturday 18 March 2017

#உயிர்வலி #91

#உயிர்வலி
****
உயிர் திணறும் வலியொன்றைத் தந்து
உடல் மட்டும் கேட்கிறாய்! எடுத்துக் கொள்! 
இரண்டையும் ஒரு சேரக் கொள்வாயெனில்! 

கடலோடு கலந்த ஆறொன்றை வழிதிருப்பிக்
கரையாக மறுக்கிறாய்! அணையொன்று இடு! 
தேக்கி வைப்பாய் உன் நினைவிலெனில்! 

மனம் கொன்று புதைத்து விட்டு
மலர்ப் பதியனிடுகிறாய்! காப்பாற்றி விடு! 
பூக்களாவது பிழைத்துப் போகட்டும்! 

ஆசையெனும் நெருப்பிலிட்டு உண்மையை
ஆகுதியாக்குகிறாய்! எரியட்டும் பொறு! 
சாம்பலில் என் இதயம் உயிர்த்திருக்கக் கூடும் ! 

#ரத்னாவெங்கட்.

No comments:

Post a Comment