#உனை வரைகிறேன் ஓவியமாய்
**********
உனை வரைகிறேன் ஓவியமாய்
தினம் கண்ணீரில் உன் நிறம் குழைத்து
உப்பிட்டு உலகுள்ளவரை காக்கிறேன்
என் நினைவுகளில் உனைப் புதைத்து!
உயிர் கலந்த உறவே உந்தன்
வண்ணம் பல தொட்ட தூரிகையில்
வரையும் ஒரு வானவில் கூட
உரிமை மறுத்து ஏகுதே வானில்!
தனை மறந்து பருகும் இதயம்
கள்ளுண்ட வண்டாய் ஆகும்!
என்றோ உனை மறந்து நீ உதிர்த்த
மனம் தொடாத உன் வார்த்தைகளை!
தடைகள் தாண்டி வாவென அழைத்தேன்
காற்றாய் என்னுள் உயிர்த்திருக்க! நிலை
தடுமாறச் செய்து உணர்வழித்தாய்! மென்
கவிதை ஒன்றின் கருவறுத்தே!
திரைக்குள் மறைந்தாய் ஒளியின் துகளாய்
இருண்டதென் வானம்....நில்லடா!
குடைக்குள் மழை விழிகளில் தூறலாய்
விசும்புகிறது உயிரே....சொல்லடா!
#ரத்னாவெங்கட்.
No comments:
Post a Comment