Saturday 18 March 2017

#ஒரு முறை புன்னகைக் கொடு 18.01.17 #72

#ஒரு  முறை புன்னகைக் கொடு
18.01.17

கருவேலங்காடொன்று செழித்து வளரும்
கருமேகம் கவிந்து பயம் காட்டும்
கருங்கோட்டான் கூவுதலில் உயிர் நடுங்கும்
காவு கேட்டு அலையும் ஒரு மிருகம்!  

விஷக்கனிகள் உண்டு எச்சமிடும்
விரிந்த சிறகுகளில் திடம் சேர்த்து
விடைக்கும் அலகொன்றைக் கூர் தீட்டி
விழி கொத்தக் காத்திருக்கும் பறவையினம்!  

பிளவுற்ற நாவொன்றைக் காட்டி மயக்கிப்
பல்லில் சேர்த்து வைத்த நஞ்சைப் புகட்டிப்
பிணைத்துப் பித்தாய்த் திரிய வைத்துப்
படமெடுத்துப் பளபளத்து நெளியும் அரவினம்!  

முள் அகற்றிப் புது வனமொன்றாய்
முகில் கண்டு பீலியசைய மயில்
கவியுள்ளம் பொங்கப் பீடு நடையிடக்
குயில் கூவும் பிருந்தாவனமாய் ...

ஒளி தீண்ட விலகும் இருளின்
ஒவ்வாமை உள்ளத்தின் கருமையதில்
ஒளிந்திருக்கத் தூண்டியதை வெளிச்சமாக்க
ஒளிச்சிதறும் மத்தாப்பூவாய்
ஒரு முறை புன்னகைக் கொடு! 

#ரத்னாவெங்கட்

No comments:

Post a Comment