Saturday 18 March 2017

#நீ மீட்டிய யாழ் கொடுத்த சுரம் என்னருகில் நிற்கிறது #பித்தாகக் கிடந்து வாழ்ந்தென்ன பயன் #76

#நீ மீட்டிய யாழ் கொடுத்த
சுரம் என்னருகில் நிற்கிறது
#பித்தாகக் கிடந்து வாழ்ந்தென்ன பயன்
29.12.16


நீ மீட்டிய யாழ் கொடுத்த
சுரம் என்னருகில் நிற்கிறது
நீ பேசிய மொழி பாடலின் வரியாய்
உணர்வுகளோடு உறைந்திருக்கிறது!

நீ பார்த்த பார்வைகளில் என் மனம்
குளிர் காய்ந்து சுகித்திருக்கிறது
நீ தீண்டிய வாழ்வின் பக்கம்
உன் கைக் குறிப்புகளால் நிறைந்திருக்கிறது!

நீ சென்ற வழித்தடத்தில்
உலகிங்கு அஸ்தமித்து நிற்க
நீ பிரதிபலிப்பாய் விட்டுச் சென்ற
உறவொன்று பிரகாசித்து இழுக்கும்! 

சுரம் ஒன்றில் விளையுமோ சந்தம்
சுருதி கூட மூன்றின் பந்தம்
சுகம் கலைய ஏங்கிடும் நெஞ்சம்
சுமை அல்ல வாழ்வின் பந்தம்! 

முத்தாக என் உயிரில் உனைப் பொருத்தக்
கொத்தாக மலர் ஏந்தி வேண்டி நின்றேன்
வித்தாக வரம் தந்து வேர் அறுத்தாய்
பித்தாகக் கிடந்து வாழ்ந்தென்ன பயன்! 

#ரத்னாவெங்கட்.

No comments:

Post a Comment