#வானவில் துகள்
*****
காற்றில் ஆடும் தூசாய்
அலைக்கழிக்கிறாய்! பிறர்
கண்களில் விழுந்து உறுத்தும்
எண்ணம் சிறிதுமில்லை!
வாலறுந்த பட்டமொன்றாய்
இடவலமாய் அலைய வைக்கிறாய்!
மேகத்தில் தொலைவதன்றி
சிக்குவதில் விருப்பமில்லை!
கவர்ந்திடும் பூவொன்றாய்
கருத்தில் மணக்கிறாய்!
கொய்வதைத் தவிர்க்கிறேன்!
வன்முறையில் நம்பிக்கையில்லை!
மயக்கிடும் நல் இசையாய் என்
செவிகளில் நுழைகிறாய்!
மனதினை நீ அசைத்தாலும் அங்கே
சிறை வைக்க ஓர் ஆசையில்லை!
வானவில் வர்ணமாய் உன்
விழிகளில் நான் ஒளிர்ந்தாலும்
விடியும் வரை சேர்ந்திருக்க நம்
விதியினிலே சொந்தமில்லை !
#ரத்னாவெங்கட்.
No comments:
Post a Comment