#காதல் பறவை
விரித்த சிறகுகள் வான்வழி பறக்கச்
சிலிர்த்த மலரது இதழ்விரியத் துடித்துத்
திளைத்த நொடிகளின் கனம் வழியத்
திகைத்து நின்றது வாடி மடிந்திட!
எடுத்த தேனின் சுவையில் கிறங்கித்
தொடுத்த அம்பின் வேகங் கொண்டு
தடுத்த காற்றை மீறியே பறவை
கொடுக்கத் திரும்புமோ பூவின் உயிரை?
#ரத்னாவெங்கட்.
No comments:
Post a Comment