#சம்மதம் சொல்லியே தந்துவிடு உள்ளமதை
#மூச்சுக் காற்றே நூலாய் என்னிடம்
05.12.16
சம்மதம் சொல்லியே
தந்துவிடு உள்ளமதை
சகியே ஒரு வார்த்தை
சங்கேத மொழியிலேனும் !
சந்தேகம் இன்னுமோ?
சங்கடம் தீருமோ?
சசியே ஒரு பார்வை
சாரலாய் வீசியேனும்!
கள்ளவிழிப் பார்வையில்
தெளித்துவிடு காதலை
கண்ணே கள்ளமதை
வைத்துவிடு சொல்லிலே!
கன்னச் சிவப்பழகில்
பளபளக்கும் அன்பதை
கனிவாய்க் காட்டிவிடு
படபடக்கும் விழியிலே!
இதழோரச் சிரிப்பினிலே
இன்பத்தின் சாயலொன்றை
மதிமுகத்தின் மகிழ்வினிலே
மறைமுகமாய் உணர்த்திவிடு
இனியவளே சில்லென்று
இதயத்தில் பூத்திடுவாயென்றே
இனித்திடும் தேனையொத்த
இதழால் நீ உரைத்துவிடு!
செவிமடலை வருடிடும்
இசையாய் உள் நுழைந்து
தெவிட்டாத சந்தமொன்றை
இசைத்திடு பாட்டொன்றாய்
வேய்ங்குழல் எடுத்து
மூடிய உன் இதழ் பிரித்து
பூபாள ராகமொன்றை
ஊற்றாய் என் உயிரினிலே
ஊதிடு மூச்சுக் காற்றே
நூலாய் உன்னிடம்!
#ரத்னாவெங்கட்
No comments:
Post a Comment