#48 வார்த்தைகள்
படக்கவிதை
அரும்பு மலரே அன்பின் கொடையே
அழகின் மொத்தமும் நீயே நீயே
ஆசை கொண்டு வாரி அணைத்தேன்
அன்னையும் இனி நானே நானே
இன்னல் நீக்கும் இசை என்றாகி
இனிமை சேர்த்தாய் தேனே தேனே
எட்டிப் பார்த்து என்ன கண்டாய்?
என்னிடம் சொல் மானே மானே
கன்னம் குழியும் கனிச்சிரிப்பில் என்
கவலை மறந்தேன் கண்ணே கண்ணே
மகிழ்ச்சி என்றும் மனதில் பொங்க
மேன்மை கண்டு வாழ்க பொன்னே
கவியாக்கம் - ரத்னா வெங்கட்
No comments:
Post a Comment