#அவசர கல்யாணம்
21.09.16
சுற்றும் பூமியின் சுழலும் நேரம்
துரிதப் படுத்தும் காலமிங்கே
எங்கும் எதிலும் காண வேண்டும்
உடனடித் தீர்வே நேரமெங்கே?
கண்கள் பார்த்துக் கடிதம் எழுதிக்
கல்யாணம் முடித்தது கற்காலம்
காதல் என்பது தவிர்க்க முடியாச்
சமூக அழுத்தம் இக்காலம்
பந்தய வெறியில் கடிவாளமிட்டுப்
பயிற்றுவித்த சமுதாயம் ஓடவிட்டுப்
பல தளைகளால் கட்ட வெருளுது
தடைகளை உடைத்திட்டு மிரண்டு
பதறியே செய்யும் செயலது அவசரக்
கல்யாணமதில் தொடங்கி சிதறிப் பிரியுது
பருவ வயதின் கனவுகள் பிடிமானமில்லாப்
படியென்றாகிட வழுக்கியே விழுந்தது
உடலின் மாற்றம் புரிபடாக் குழப்பம்
ஊறு விளைவிக்கும் இணைய வெளிப்பாடும்
தோளதில் கைபோட்டு விவாதமிட்டுத்
தோழமையோடு விளக்கமளித்துத்
தொலைதூரப் பார்வையளிக்கும் பெற்றோரும்
தெளிந்த நோக்கும் அறிவும் தந்திடும்
வாழ்க்கைக் கல்வியும் அவசியமிங்கே....
கவியாக்கம் - ரத்னா வெங்கட்
No comments:
Post a Comment