பாரதிதாசன் போட்டி#1
#மேகங்கள் அழுகின்றன
23.0916 லிருந்து 26.09.16 வரை
கீழ்த்திசை உதித்திடும் கதிரவனும்
அச்சினில் சுழன்றிடும் புவியதுவும்
கடமை மறந்திடல் சாத்தியமோ?
வீணரோ நாம் மானுடரே?....
கர்ப்பத்தில் காத்திட்ட தாயவளைக்
கலங்கிடப் பொதுவினில் கைவிடுவோமோ?
ஆத்திரம் கொண்டே உறவுகளைச்
சாய்த்திட்டுத் தனியே நிற்போமோ?
மடியினில் தவழ்ந்திட இடமளித்தாள்
மரகதப் பச்சை வயல் கொடுத்தாள்
மண்ணும் நதியும் காடும் கடலும்
மழையும் இயற்கையின் கொடையன்றோ?
ஏரிகள் தூர்த்து நதிமணலது திருடி
நிலத்தடி நீரை உறிஞ்சியே குறைத்து
காடுகள் அழித்து மரங்களைச் சாய்த்து
காற்றின் தரத்தை மாசு படுத்தி
மண்ணின் கற்பை மதிக்க மறந்து
சுற்றுச்சூழல் கெடுத்தோமே
சுயநலம் நாளைய சந்ததி
அழிக்கும் என்பதை நாமும் மறந்தோமே
ஆனந்த மேகங்கள் பொழிந்திட்டால்
தழைத்திடும் உயிர்களும் பயிர்களுமே
அமிலமாய் மேகங்கள் அழுதிட்டால்
தவித்தே அழிவோம் சத்தியமே
கவியாக்கம் - ரத்னா வெங்கட்
No comments:
Post a Comment