01.10.16
#48 வார்த்தைகள்
படக்கவிதை.
காத்திடும் தகைமைகள்
காணாத தலைமைகள்
வளங்களைச் சுரண்டியே
வங்கியில் பணம் சேர்த்து
ஏழேழு தலைமுறைகளுக்காய்
நம்மை அடகு வைக்க
ஏரிகள் அடுக்கு மாடிகளாய்
மாறியே உயர்ந்திட
நெகிழிக் குப்பைகள்
வடிகால்கள் அடைத்திட
வெள்ளநீர் உள்புக
நாமுமன்றோ காரணம்?
நன்றியும் அன்பதும்
நாலுகால் பாய்ச்சலில் ஆடிடும்
வாலதில் காட்டிடும் அதனுடன்
வாலாய்த் திரிந்த சுட்டியும்
பாசமும் பண்பையும்
தலைக்கு மேலோடி
தன்னையும் விழுங்கிடும்
தண்ணீரில் காட்டிட
மனிதமிங்கு வாழுது
கவியாக்கம் - ரத்னா வெங்கட்.
No comments:
Post a Comment