#முதுமையில் நடுங்குகிறதெனது கரங்கள்
#நிம்மதி வேண்டும் கல்லறையில்
26.09.16
முதுமையில் நடுங்குகிறதெனது கரங்கள்
முட்டிகளும் அதற்கேற்ற தாளமிட
வறுமையிலும் சோராத எந்தன் இதயம்
வலுவிழந்து வாசலிலே காத்திருக்குது
எட்டினிலே ஒன்றெனவே பிறந்ததாலே
எட்டவில்லை கையினின்று வாய்க்கு கிடைத்தது
ஏட்டுக் கல்வி பாதியிலே கனவாகிப் போக
ஏற்றமது உழைப்பின் வழி என்றேயாச்சு
அஞ்சவில்லை வேகங்கொண்ட இளரத்தமே
ஆர்வமது சேர்ந்ததாலே எதிலும் ஓட்டமே
மணித்துளிகள் கணக்கில்லை பணம் மட்டுமே
மானமாகப் பிழைத்திடவும் வழி இருக்குதே
தம்பி தங்கை உயர்ந்திடவும் உதவி செய்தாச்சு
தாரம் வந்தபின்னே பாரம் சமநிலையாச்சு
எங்களது குடும்பமென்று ஆனதன் பின்னே
மாற்றமது கண்டு வாழ்வில் மகிழ்ச்சி உண்டாச்சு
கண்நிறைந்த பிள்ளைகளும் தம் கூட்டினில்
கால ஒட்டம் இப்போது அவர்கள் கையினில்
கட்டிவள் முந்திச் செல்ல நானோ தனிமையில்
காத்திருக்கிறேன்.......
நிம்மதி வேண்டும் கல்லறையில்
கவியாக்கம் - ரத்னா வெங்கட்
No comments:
Post a Comment