Sunday 2 October 2016

#அத்தமவளே அடியே #உசுரே நீதான் கிளியே 24.09.16 #60

#அத்தமவளே அடியே
#உசுரே நீதான் கிளியே
24.09.16

அத்தமவளே அடியே....என் முத்து ரத்தினமே
அல்லித்தண்டு போலே அடியெடுத்து வாரவளே

அன்னமே மரிக்கொழுந்தே அஞ்சுகமே மல்லிகையே -யாரும்
அறியாமப்பாத்து என்னைப்பித்தா நீயும் ஆக்கிட்டியே

ஆத்தோரம் குடமெடுத்து வஞ்சி நீயும் நடக்கையில
ஆடுதடி எம்மனசு உந்தன் ஓரப்பார்வையிலே 

ஆடி போயி ஆவணியில் பரிசமொன்னு போட்டிடவா
ஆமான்னு சொல்லிடு நீ தங்கத்தாலி வாங்கிவாரேன் 

இனிமேலும் காலந் தள்ள என்னுசிரு தாங்காதே
இசைந்திடு என்னுயிரே என்னோடு நீ சேர்ந்திடவே 

உண்மையாக உழைத்திடுவேன் கண்ணா உன்னைக் காத்திடுவேன்
ஊருலகம் மெச்சிடவே ஒத்துமையா வாழ்ந்திடுவோம் 

ஏரோட்டும் மாமனும் நான் ஏடெடுத்துப் படிச்சவ நீ
என்னிக்குமே உன்னுடைய சொல்பேச்சு கேட்டிடுவேன் 

என்னுடைய ஆசையத்தான் உன்னிடத்தில் சொல்லிப்புட்டேன் மறுக்காதே
மரகதமே என்னோட உசுரே நீதான் கிளியே....

கவியாக்கம் - ரத்னா வெங்கட்

No comments:

Post a Comment