Sunday 2 October 2016

சூழ்நிலைக்கு மெட்டமைத்து பாட்டெழுதும் போட்டி 23.09.16 #57

 சூழ்நிலைக்கு மெட்டமைத்து பாட்டெழுதும் போட்டி
23.09.16

பல்லவி
ஆண்
என் வானம் இன்றிங்கே இருளானது
என் வீணை ஸ்ருதிசேர விரல்தேடுது
மேகங்கள் மழைதேடி நகர்கின்றது
என்பாடல் உனக்கென்று தான் ஏங்குது

அனுபல்லவி

கரை தேடும் அலைகள் நானென்பது
பிரிந்தோடும் நதியோ நீயென்பது

காலங்கள் மாறும் வாழ்வென்பது
கனவல்ல காண்போம் நிஜமென்பது
காயங்கள் ஆறும் மனமென்பது
கனியட்டும் கண்ணீரே மருந்தென்பது 
என் வானம்.....

சரணம்

திசை மாறிப் பறக்கும் உந்தன் மனம்
கூண்டொன்றில் தவிக்கின்ற பறவை இனம்

வார்த்தைகள் போதும் பெண்ணே இனித்
தாங்காதென் நெஞ்சம் மலர்ப் பூங்கொடி
வரமென்று வந்தேன் மாறாதிரு உன்
மனமெங்கும் இருள் நீக்கி ஒளி சேர்த்திடு
என் வானம்....

கவி முயற்சி- ரத்னா வெங்கட்

No comments:

Post a Comment