Sunday 2 October 2016

#நிலாவே வா மெட்டுக்குப் பாட்டு 23.09.16 #59

#நிலாவே வா மெட்டுக்குப் பாட்டு
23.09.16

பல்லவி:

கனாவே வா... கண்தேடி வா....
காணாமல் நான் கண்மூடல் வீண்
விழி ஓரம் உனைநானும் 
தினந்தோறும் அழைப்பேன்

சரணம்1

பூமாலையோ வாடுதிங்கே உந்தன் தோள்சேர
பாமாலையும் ஏங்குதிங்கே சந்தம் அதில் சேர
மேடையது கண்டு வாழ்வே இது என்று
தாவிவந்தேன் நானும் தள்ளிச் சென்றாய் நீயும்
ஆகாயம் என்னில் நீ என்றும் காணா நீலம்.... 

கனாவே வா...

சரணம்2

வானவில்லின் வர்ண ஜாலம் கண்கள் காணும் நேரம் 
கண்சிமிட்டும் நேரம் அந்த வண்ணம் என்ன மாயம்
காயம் அது தந்தாய் காயும் வெண்ணி லாவே
முள்ளாய் நீயும் தைத்தாய் தேனிலாடும் பூவே
கடல்தாண்டி நடந்தாயே பாயும் நதியே நீயே

கனாவே வா......

கவி முயற்சி - ரத்னா வெங்கட்

No comments:

Post a Comment