பால்கனியில் பூத்திருக்கும்
பலவண்ண மலர்களிலே
பறந்தமர்ந்து பறந்தமர்ந்து
தேன் சுமந்த
தேன்சிட்டை
பைத்தியப் பராக்கு
பார்த்துக்கொண்டிருந்தேன்
தேன்சுமக்கும் அதன் நெஞ்சில்
என்னென்ன நினைவுகள்
தேங்கிக்கிடக்குமென்று......
பின் தெளிந்த மனமோ
மிக்க பாவனை
கொண்டென்னை
விளித்துப் .... பைத்தியமே
விட்டு விடுதலையான குருவிக்கு
கட்டும் நினைவுகள் கிடையாது
அதனைக் கட்டும் நினைவுகள் கிடையாது
சுமக்க நேர்ந்திருந்தால்
நினைவுகள் சுமக்க நேர்ந்திருந்தால்
பின் பறக்க முடியாதென்று......
எனக்கென்ன மேதாவி
நீதானென்று
மனதிடம் சொல்லிவிட்டு
பாரமான அதனை நகர்த்திக்கொண்டு
உள் நகர்ந்தேன்......
No comments:
Post a Comment