Sunday 21 August 2016

சங்கத்தில் காணாத கவிதை 10.08.16 #13

சங்கத்தில் காணாத கவிதை
#ஆட்டோ_ராஜா_
10.08.16

கானல் நீர் ஆன என் கனவது
கண்ணீரில் கரைந்தோடுது
காணாமல் தேய்ந்தது மனமது
காயங்கள் யார் கண்டது
காணாமல் தேய்ந்தது மனம் அதன்
காயங்கள் யார் கண்டது

உன் கண்ணில் நான் கண்ட சுடரது
என் வாழ்வில் ஒளி வீசுமோ
மென் தென்றல் விளையாடும் பொழுதினில்
தீண்டாதோ என் தேகமோ
நானென்ன.....
நான்தானோ.....
என்னுள்ளே எனைக் கொண்டு தருவாய்
உயிர் மூச்சாய்  உறவாட தினம்தினம்
கானல் நீரான...

மேகங்கள் வான்மீது நிலவதை
மூடட்டும் இவ்வேளையில் 
காயங்கள் ஆறாத மனம் அது
தூங்கட்டும் அவ்வேளையில் 
பெண் நெஞ்சம்......
தான் அஞ்சும்.......
ஏக்கங்கள் தீராத இதயமும்
தூக்கத்தில் விலகாது மோகமும்
கானல் நீரான.....

என் வீணை மீட்டாத விரலிது
இன்றேனும் சுருதி சேர்க்குமோ
என் கூந்தல் சேராத மலரிது
என்றேனும் மணம் வீசுமோ
கண் பட்டு....
புண் பட்டு....
காலங்கள் வீணாகக் கழியுது
கன்னங்கள் கண்ணீரில் நனையுது
கானல் நீரான....

சிந்தித்தே கொள்ளாத உறவிது
சித்தம் கொல் என்றாகுமோ
சந்தத்தில் சேராத கவி இது
சந்தம் சேர் பாட்டாகுமோ
விண்மீனோ........
வீண்தானோ......
மேகங்கள் தானாகக் கலைந்தது
தாளாமல் பயிரது வாடுது.....
கானல் நீரான...

கவியாக்கம்   ரத்னா வெங்கட்

No comments:

Post a Comment