#விழி தாண்டும்போது....
.....#நினைக்கையிலே
விழி தாண்டும்போது .....
உன் விழி தாண்டும்போது
புதுப்பித்துக் கொள்ளும் என்
இதயம் தன்னை அறியாமல்
ஒவ்வொரு முறையும் .....
இமைக் குடை நீ விரிக்க
இளம் சாரல் எனை நனைக்க
உச்சியிலே சூரியனும்
உறை பனியாய் உருவெடுக்க
தேனாறு உறையும் ......
படபடக்கும் பட்டாம்பூச்சி
பளபளக்கும் உன்கண்ணில்
மது அருந்தா வண்டிரெண்டு
மயங்கி விழும் என் கண்ணில்
தன்னாலே......
புருவங்கள் வில்லாக நீ
யோசிக்கும் பொழுதினிலே அதில்
பூட்டிய அம்பாக என் இதயம்
தொக்கியதும் சிக்கியதும்
யோசிக்காமலே......
புன்னகைத்தால் முத்தென்று
போற்றுவோர் பார்த்ததில்லை
உன் விழியை ... பார்த்திருந்தால்
இணையில்லா வைரங்கள் என்றிருப்பார்
கேட்காமலே.....
மணிகள் குலுங்கியதோ சிரிப்பினிலே
சிரிப்பழகா கன்னச் சிவப்பழகா
சிரிக்கையில் சுருங்கும் மூக்கழகா
நீர்த்துளிகள் பூத்த விழி அழகா
தெரியலையே.....
கோலிக்குண்டெனவே உருளும்
கோபம் வந்தால் உன் விழியும்
ஓராயிரம் கதை சொல்லும்
அஞ்சுவதா கெஞ்சுவதா கொஞ்சுவதா
புரியலையே.....
விழி தாண்டினால் என்ன கோடி முறை
திரும்ப விழுவதில் தடை இல்லாத வரை
பிறிதொரு துணை தேவையில்லை
உன் விழித்துணை ஒன்றை மட்டும்
நினைக்கையிலே.....
No comments:
Post a Comment