Sunday 21 August 2016

புகைப்படக் கவிதைகள் # 48 வார்த்தைகளுக்குள் 20.08.16 #8

கபட நாடக வேடங்கள்
கட்டிய காசு மூட்டையுடன்
சன்னதியில் உருகி மருக
பிரகாரத்தின் தூணிடையே
பட்டுக் குட்டிக்கு 
கண்ணாமூச்சி ரேரே
காட்டிக் கொண்டிருந்தது கடவுள்
பாவப் பட்டயங்கள் 
புதைந்த பணமூட்டைகள்
தகுதியில்லா ஆசைகளின் 
தன் முயற்சியில்லா வேண்டுதல்கள்
படோடாபங்கள் ஆட்சி செய்யும்
பகட்டான ஆலயங்கள்
பாவத்தில் ஒளிந்து கொண்டு
கண்டு கொள்ளாதேயெனும் 
பிரார்த்தனைகள் 
மூச்சடைத்து கருவறை வெறுத்து
புறங்காண ஓடியதைத் தடுத்தது
பனித்துளியாய் படைப்பதனில்
முகிழ்த்ததொரு செண்டு.  


#48 வார்த்தைகளுக்குள் 


தள்ளாடும் வயதினிலே 
தாள்தான் கழண்டு விழ
தாள் பொதியும் சுமந்தாயே 
தாயே உன் கதையென்ன..... 
குலக்கொழுந்து கருங்காலிக்
குன்றெனவே ஆனானோ
உளம் பூக்காத் தரிசெனவே
உறங்கித் திரிந்தானோ....
ஊர் காணாக் கதையுமில்லை
உள் நாக்குவரை கசப்பான நிலை....
கயிறாய் வந்த கல்லும்
வயிற்றில் வளர்ந்த புல்லும்
கண்டதே மதுவில் இன்பம்
தந்ததே உடலும் என்பும்
தனியில்லை என் துணையாய்
இணை மூட்டை சுமப்பது
மருமகளும் பெற்ற மகளுமே....

கவியாக்கம் - ரத்னா வெங்கட்

No comments:

Post a Comment