கனவே கலையாதே என்
கனவே கலையாதே
கண்மூடித் தவம் செய்யும்
பொழுதினிலே இரவில்
கண்மூடித் தவம் செய்யும்
பொழுதினிலே இமைகளுக்குள்
கன்னமிட்டு நுழைந்தாயே
காட்டினில் தனித்த முனியோ -நான்
காட்டினில் தவித்த முனியோ
பூட்டிய மனதினில் ஒளியோ -நீ
கசிந்து உள்ளேறிய ஒளியோ
காற்றினில் கலந்திட்ட மணமோ -நீ
காற்றினில் கலந்திட்ட மணமோ என்னுள்
காற்றாய் உயிர்த்திட்ட கருவோ
கன்னமிட்டு நுழைந்து
கருவாய் மலர்ந்து
ஒளியேற்றி என்னில்
ஓயாத கனலேற்றி நின்றாயே
கனவே..... நான்
கண்திறந்தால் கலையாதே என்
கனவே கலையாதே.
No comments:
Post a Comment