Sunday 21 August 2016

கிறுக்கல்கள் # 4 2nd aug 2016 #12

கனவே கலையாதே  என்
கனவே கலையாதே 
கண்மூடித் தவம் செய்யும் 
பொழுதினிலே இரவில் 
கண்மூடித் தவம் செய்யும் 
பொழுதினிலே இமைகளுக்குள்
கன்னமிட்டு நுழைந்தாயே
காட்டினில் தனித்த முனியோ -நான்
காட்டினில் தவித்த முனியோ
பூட்டிய மனதினில் ஒளியோ -நீ
கசிந்து உள்ளேறிய ஒளியோ
காற்றினில் கலந்திட்ட மணமோ -நீ
காற்றினில் கலந்திட்ட மணமோ என்னுள் 
காற்றாய் உயிர்த்திட்ட கருவோ
கன்னமிட்டு நுழைந்து
கருவாய் மலர்ந்து
ஒளியேற்றி என்னில் 
ஓயாத கனலேற்றி நின்றாயே
கனவே..... நான்
கண்திறந்தால் கலையாதே என்
கனவே கலையாதே.

No comments:

Post a Comment