Sunday 21 August 2016

புகைப்படக் கவிதைகள் 21.08.16 #5

21.08.16

முத்தமிழ் கொண்டதோ ழகரம்
மொழிகள்  பல காணா உயரம்
இதழ் அது தந்ததோ முத்தம்
பல மொழிகளைப் போல் அதன் வடிவம்.....
அன்னையிடத்தில் தொடங்கி
அன்பின் உருவம் தாங்கி
கன்னியவள் கடைக்கண்ணால் ஏகி
கனியிதழ் கடைத்தேற்றுமோ என்றேங்கி...
முறைகள் செய்யும் வரை தாங்கிப்பின்
கரைகள் கடந்த அலையாகி
ஆழ்கடல் முழுகித் தேடி
கிடைத்த புதையல் மகளென்றாகி.....
எந்தன் வானமவள் எனக்களித்த 
முதல் முத்தம்
ழகரத்தின் அழகிற்கு ஒப்பும்.....

போட்டி#2

தனியே கண்டால் காட்டில்
படையே நடுங்கும் கரியன்
பாகன் கட்டிய கயிற்றில்
பாங்காய் அடங்கிய கொம்பன்....
தும்பிக்கையின் பலம் தன்னை 
அறிந்தே மனிதன்- வாழும்
குன்றேயனைய வேழம்- அறிவால் 
கொண்டான் அடிமை தானும்.....
கண்டோர் பதைத்துத் திகைக்க
காட்சிப் பிழையும் அல்ல
கனவுகள் கண்ட உறக்கம் 
காண்பது நம்பிக்கையே வேறல்ல.....
கயிற்றினில் அடங்குமோ களிறு
மனித முயற்சியில் முடங்கியதிங்கே
தன்னம்பிக்கையின் முரண்பாடு
தனைக் கண்டபின் முயற்சியே செயல்பாடு.....

கவியாக்கம் - ரத்னா வெங்கட்

No comments:

Post a Comment