கிள்ளை வயதில்
கிளை பரப்பும் நேசங்கள்
சில்லறைச் சிரிப்புகள்
சிந்திய வழித்தடங்கள்
புத்தகச் சுமைகளொன்றே
புத்தியில் சுமைகளில்லை
கண்ணாமூச்சி விளையாட
கதிரவனும் தயங்கவில்லை
தோளில் தாங்கிட
தோழமைக்குத் தடையே இல்லை
வீடு செல்ல மனமில்லை
வானமே எங்கள் எல்லை.....
கன்னிப் பருவத்தில்
கனவுக் குழப்பத்தில்
தன்னெஞ்சே சுமைதானோ
தண்ணிலவும் தகித்திடுதோ
நூலாடையும் கனக்க
நூலிடையும் சோர்ந்ததுவோ
காணாத பிம்பத்தை
வான் நிலவில் தேடியதோ
காதலே தீராத தொல்லையோ?
கவியாக்கம் - ரத்னா வெங்கட்
No comments:
Post a Comment