#ஏக்கம்
24.08.16
நித்திரை கரைந் திடத்தன்
முத்திரை பதித்திடுமே நிதம்
புத்தி குடைந்தே மணலாய்க்
குமித்திட்டு சித்தம் எங்கும்
ஊர்ந்து திரிந்திருக்கும் நண்டு....
அழையாமல் கண்வழி வாசல்
நுழைந்திட்டு அனுமதி பெறாமல்
மனக் கதவை அடைத்திட்டுப் பின்
புழுக்கம் தாங்காது வாயால்
புற வெளியேறும் பெருமூச்சு.....
தீர்த்திடும் வகையுள்ள தொன்று
சிறு ஆசையில் விளைந்திட்ட கன்று
ஊக்கமது கொண்ட உள்ளம் பிறர்
தேக்கம் தவிர்த்திடத் திரு ஈயும்
நல்லிதயம் இணைந்திட நீங்கும்.....
தீர்ந்திட வழியில்லா ததொன்று
காழ்ப்பும் கசடும் வேராகி உள்
அழுக்கில் விளைந்த பயிராகி
கருவேலங்காட்டு முள்ளாக மன
வளம் உறிந்து தரிசாக உமிழும்......
வருமுன் காப்போர் ஞானியர்
வந்தபின் தீர்ப்போர் அறிவானவர்
வழிமாறி வழிகாணத் தெரியாத மூடரை
வழித்து விழுங்கும் புதைகுழி 'ஏக்கம்'......
கவியாக்கம் - ரத்னா வெங்கட்
No comments:
Post a Comment