இனிய தோழியே என்கவிதைக்கான
உன் பதில்களெல்லாம்
உட்பொருளாய்க் கூறுவது
நல்முத்தாய் அறிவுரைகள்
நன்றி என் தோழியே
கவிதைகள் கவிதைகளே
என் வாழ்க்கையின்
கருப்பொருளல்ல
கடந்து வந்த பாதையில்
சுமந்து வந்த கற்களை
இறக்கி வைக்கவே கவிதைகள்
கூடுதலாகத் தூக்கிச் சுமக்க அல்ல
சுட்டுவிட்ட சட்டியைத் தூக்கில்
இட்டுவிட்ட மனமே இங்கு
மிஞ்சிவிட்ட வடுவைச் சற்று
நிரடிப்பார்க்கும் சுகமான
சோகமே கவிதை
கைகொடுத்துக் கைப்பிடித்த
துணையொன்றுண்டு அருகினிலே
புண்பட்ட மனது பண்பட்டபின்னே
சலனமில்லை வாழ்க்கையிலே
துளிச் சலனமொன்றில்லை வாழ்க்கையிலே
கவிதைகள் கவிதைகளே என்
வாழ்க்கையின் கருப்பொருளல்ல....,
No comments:
Post a Comment