Thursday 29 December 2016

# நம்பிக்கையின் பலம் 05.10.16 #67

# நம்பிக்கையின் பலம்
05.10.16 

தன்னிடத்தில் வைத்தல் பலம்
தன்மை உணர்ந்து பிறரிடம்
வைத்தல் நலம்....

தன்கையைப் போலே தனக்குதவும்
தானுயரத் தடைக் கற்களை
நகர்த்தியே தரும் ....

ஆறறிவு உள்ள இனம்
ஆனாலும் அவசியம்
நம்பிக்கையூட்டும் மனம் 

அளவு குறைந்திட்டால் தாழ்விலும்
அதுவே உயர்ந்திடக் கனத்திலும்
தலை குனியும்....... 

கடவுளின் மேல் பாரமிட்டுக்
கண்மூடிக் காத்திருந்து
காண்பார் பலர்.... 

உள்ளத்தின் விளக்கேற்றி
ஊக்கமதின் துணையோடு
உயர்ந்திடுவார் சிலர்....

குறையில்லா உடல் பெற்றும்
நம்பிக்கைக் குறைபாட்டில்
நலிந்தோரும் தவழ்ந்திட.... 

உடலதின் குறையதனை இதன்
உறுதுணையோடு 
வென்றவரோ உயரத்தில்......

எண்சாண் உடலதைக் கட்டும்
எண்ணங்கள் சீர்படுத்தும் 
நம் மூளையதும்.... 

உணர்வுகள் பின்னே ஒன்றி
உறவது தேடிச் செல்லும்
நம் இதயமும்..... 

ஒற்றுமையாய் செயலாற்ற
ஒருங்கிணைக்கும் 
நம்பிக்கையே பலம்
நம்பினால் கிடைத்திடும் வளம் 

கவியாக்கம் - ரத்னா வெங்கட்

No comments:

Post a Comment