Thursday 29 December 2016

#விழுந்தாலும் விதையாகிடு. 04.10.16 #66

#விழுந்தாலும் விதையாகிடு. 
04.10.16

எல்லைகள் தாண்டி தேசங்கள் விரிய
வேலிகள் இட்டு தேசங்கள் குறுக்கி
வேலிகள் தாண்டி நேசங்கள் மலர
தேசங்கள் பேச்சு வார்த்தை நடத்தும் 

எல்லையின் காவல் அதிகப் படுத்தி
நல்லிணக்கத் தூதுவர் பெயருக்கென
நட்பென்று நேசக்கரம் நீட்ட
எழுதாத நாடகங்கள் அரங்கேறும் 

எல்லைப் பணியில் எம் வீரர்
தன்னலம் கருதா நம் தோழர் 
எம் உறக்கம் உம் பரிசே
தலை வணங்கி வாழ்த்துகிறோம் 

மகன், கணவன், தந்தை என்ற
அடைமொழி மறந்த காவலரும்
இடியோ மழையோ பனியோ புயலோ
இமை சோராமல் எமைக் காக்க 

திரும்பிடுவாரோ முழுதாக இல்லை
வந்திடுவாரோ பெட்டியிலே 
விதியினை அறிந்தவர் யாரோ இங்கே
அறிந்தே ஆற்றுவார் கடமையதை 

உடலது பூமியில் விழுந்திட்டாலும் 
மனங்களில் மரமெனத் துளிர்த்திடும்
விதைகளன்றோ இவர் தியாகங்கள் 


கவியாக்கம் - ரத்னா வெங்கட்.

No comments:

Post a Comment