Thursday 29 December 2016

#மெட்டுக்குப் பாடல் 03.19.16 #64

#மெட்டுக்குப் பாடல் 
03.19.16
பல்லவி 

விழியே விழியே கதை பேசு
விழியால் நீயும் வலை வீசு

கவியே கவியே மொழி பேசு
இதழால் காதல் மொழி பேசு.  

சரணம் 1

அழகே உன்னை ஆண்டவனும் 
அதிசயமென்றே படைத்தானோ
அதிசயமே உனைக் காக்கவென்ற
அருகினில் எனையே சேர்த்தானோ

மலரே மலரே மணம் வீசு
மலர்ந்தே என்னுள் ஒளி வீசு (விழியே)

சரணம் 2

ஆருயிரே என்னை அணைத்துவிடு
ஆசையின் பிடியில் இருந்துவிடு 
ஆடையில் நூலாய்ச் சேர்த்துவிடு என்
ஆவி துடிக்குதே இணைந்துவிடு

உயிரே என்னுள் உயிர்த்துவிடு
உறவாய் வாழ உறுதி கொடு (விழியே) 

கவிமுயற்சி- ரத்னா வெங்கட்

No comments:

Post a Comment