#மெட்டுக்குப் பாடல்
03.19.16
பல்லவி
விழியே விழியே கதை பேசு
விழியால் நீயும் வலை வீசு
கவியே கவியே மொழி பேசு
இதழால் காதல் மொழி பேசு.
சரணம் 1
அழகே உன்னை ஆண்டவனும்
அதிசயமென்றே படைத்தானோ
அதிசயமே உனைக் காக்கவென்ற
அருகினில் எனையே சேர்த்தானோ
மலரே மலரே மணம் வீசு
மலர்ந்தே என்னுள் ஒளி வீசு (விழியே)
சரணம் 2
ஆருயிரே என்னை அணைத்துவிடு
ஆசையின் பிடியில் இருந்துவிடு
ஆடையில் நூலாய்ச் சேர்த்துவிடு என்
ஆவி துடிக்குதே இணைந்துவிடு
உயிரே என்னுள் உயிர்த்துவிடு
உறவாய் வாழ உறுதி கொடு (விழியே)
கவிமுயற்சி- ரத்னா வெங்கட்
No comments:
Post a Comment